தொடரும்.
முகம்பாராத நட்பிற்கு எழுதப்பட்ட முகவரியிது......
விசாலமான என்மனதில் உன் விலாசத்தை விரும்புகிறேன்...!
எதிர்பார்புகளற்ற மனக்குளத்தில் நம் சிந்தனை பயணங்கள் தொடரட்டும்.
முரண்பட்ட நம் கருத்துக்கள்தான் நம்மை இன்னும்
முழுதாய் புரிந்துக்கொள்ள உதவுகின்றன .....!
நேசமென்பது மனம் சம்மந்தபட்டது என்பதை
முகம்பாராத நம் நட்பு நன்றாக உணர்த்தும்.....!
உன்னிடம் நான் என்னை எதிபார்க்கவில்லை
உன்னிடம் நான் உன்னை எதிர்பார்க்கிறேன்....!
களங்கப்படாத நட்பிற்கு நாம் கருவாய் இருப்போம் ......
இன்னும் எழுதப்படாத இந்த இலக்கணத்தில் நாம் உயிராய் இருப்போம்.
பார்வைகளை பரிமாறிக்கொண்டு பயந்து பயந்து ஏன் பசியாறவேண்டும் ?
நமக்கு பாதைகளாயில்லை....
நினைவுகளை பரிமாறிக்கொண்டு....
நிகழ்கால எதார்த்தை எதிர்பார்த்து காத்திருப்போம்...!
முற்றுப்புள்ளி வைக்கவே எனக்கு விருப்பமில்லை...
ஆனால் முடித்தாகவேண்டுமே....?
“ தொடரும் “
என்ற வார்த்தையோடு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
முகம்பாராத நட்பிற்கு எழுதப்பட்ட முகவரியிது....!

No comments:
Post a Comment